புதன், 19 அக்டோபர், 2016

முழங்கால் மற்றும் மூட்டு வலியைப் போக்க, இதோ ஒரு டம்ளர் குடிஙயுங்க !…

இன்றைய காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் ஏராமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உடலைத் தாங்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், நகரவோ, அசையவோ முடியாமல் பெரும் பிரச்சனையை அனுபவிக்கக்கூடும்.
அதிலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உராய்வு நீக்கிப் பொருளின் உற்பத்தி குறைந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள தசைநார்களில் உட்காயங்கள் ஏற்பட்டு, வலிமையை இழக்கின்றன.
இப்படி வலிமையிழந்துள்ள எலும்புகள் மற்றும் தசைநார்களை வலிமைப்படுத்துவதில் உணவுகளும் பானங்களும் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும்.
உராய்வு நீக்கி
இயற்கையாக எலும்பு மூட்டுகளில் உராய்வு நீக்கிப் பொருள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் வயது அதிகரிக்கும் போது அது குறையும். எனவே ஒருவருக்கு வயது அதிகமாகும் போது, எலும்புகளின் மீது சற்று அக்கறை காட்ட வேண்டும். இதனால் வயதான காலத்தில் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
நேச்சுரல் ஸ்மூத்தி
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மூத்தி மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இந்த ஸ்மூத்தியில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள், அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டது. இதனால் மூட்டுகளில் உள்ள உட்காயங்கள் குணமாகி, மூட்டு வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சத்துக்கள்
முக்கியமாக இந்த ஸ்மூத்தியில் வைட்டமின் சி, புரோமிலைன், சிலிகான் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் வலிமையை வழங்கி, உடலை ஆற்றலுடன் செயல்படச் செய்யும். சரி, இப்போது அந்த ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
பட்டை – 1/2 டீஸ்பூன்
அன்னாசி துண்டுகள் – 2 கப்
ஓட்ஸ் – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் ஓட்ஸை சுடுநீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு தேன், பட்டைத் தூள், தண்ணீர், பாதாம், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அன்னாசி சாறு மற்றும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பருக வேண்டும்.
பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், 5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பானத்தை தொடர்ந்து 2 வாரம் குடிகுடிக்கவும் ......
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நாம் தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?


உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில்
 நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா? பாதாம், முந்திரி,
 வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வால் நட் சாப்பிடுவது விசேஷமானது. வால் நட் காஸ்ட்லிதான். 
ஆனால் நீங்கள் சாப்பிடும் பீஸாவை விட விலை குறைவு தினமும் 5 வால் நட் சாப்பிடுங்கள். 4 மணி நேரத்திற்கு பிறகு 
என்ன நடக்கும் தெரியுமா?
வால் நட்டின் சத்துக்கள் : முதலில் அதன் நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன் அதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை உள்ளன. உடலுக்கு தேவையான மிக முக்கியமான மினரல் அனைத்தும் வால்நட் கொண்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மனதை கலங்க வைத்த பிறந்த குழந்தையின் முதல் அழுகை!..

குழந்தை அழுது தாய் சிரிக்கும் நெகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அது குழந்தையின் பிறப்பு தான்.... பொதுவாக பிறந்த குழந்தையானது அழ வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள்.
இவ்வாறு பெற்ற குழந்தையின் அழுகையை கண்டு உச்சி குளிரும் தாயின் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வாறு மகிழ்ச்சியை உருவாக்கும் குழந்தை பிறக்கும் போது பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா?...
இங்கு பிறந்த குழந்தை மூச்சு விடவில்லை, இதயம் இயங்க வில்லை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தை அழும் 
காட்சியே இதுவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இப்படித்தான் இருப்பார்களாம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் !

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:-
அசுவினி:
செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி:
நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர்.
கார்த்திகை:
பக்திமான் மென்மையானவர் செல்வந்தர் கல்வி சுமார் வாழ்க்கைத்தகுதிஅதிகம் பழகுவதில் பண்பாளர்.
ரோகிணி:
கம்பீரவான் உல்லாசப்பிரியர் கலாரசிகர் ஊர் சுற்றுபவர் செல்வாக்கு மிக்கவர் வசீகரமானவர்.
மிருகசீரிடம்:
தைரியசாலி முன்கோபி தர்மவான் புத்திசாலி திறமை மிக்கவர் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
திருவாதிரை:
எளிமை சாமர்த்தியசாலி திட்டமிட்டுப்பணி செய்பவர் விவாதத்தில் வல்லவர் சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
புனர்பூசம்:
கல்விமான் சாதுர்யப் பேச்சு ஊர்சுற்றுவதில் ஆர்வம் நன்றிமிக்கவர் ஆடம்பரத்தில் நாட்டம்.
பூசம்:
பிறரை மதிப்பவர் பக்தியில் நாட்டம் வைராக்கியம் மிக்கவர் நண்பர்களை நேசிப்பவர் புகழ்மிக்கவர் மென்மையானவர்.
ஆயில்யம்:
செல்வந்தர் தர்மவான் செலவாளி ஆடம்பரப்பிரியர் சத்தியவான் நேர்மை மிக்கவர்.
மகம்:
ஆராய்ச்சி மனப்பான்மை கல்வியில் ஆர்வம் தர்மவான் பழக இனிமையானவர் நேர்மையாக நடக்க விரும்புபவர்.
பூரம்:
ஒழுக்கமானவர் புத்திசாலி விவசாயம் வியாபாரத்தில் ஆர்வம் உண்மையானவர் செல்வாக்கு பேச்சுத்திறன் மிக்கவர்.
உத்திரம்:
நாணயமானவர் பக்திமான் நட்புடன் பழகுபவர் நன்றி மறவாதவர் சுகபோகி உறவினர்களை நேசிப்பவர்.
அஸ்தம்:
ஆடை ஆபரண பிரியர் கல்வியில் ஆர்வம் கலாரசிகர் நகைச்சுவையாகப் பேசுபவர் தாய்மீது பாசம் கொண்டவர் பழக இனியவர்.
சித்திரை:
ஊர் சுற்றுவதில் ஆர்வம் கல்விமான் தைரியசாலி எதிரிமீதும் இரக்கம் சாதிப்பதில் வல்லவர் பரந்த உள்ளம் கொண்டவர்.
சுவாதி:
புத்திகூர்மையானவர் யோசித்து செயல்படுபவர் சுகபோகி பழக இனியவர் நம்பகமானவர் யோகம் மிக்கவர்.
விசாகம்:
வியாபார ஆர்வம் சாமர்த்தியசாலி கலா ரசிகர் தர்மவான் சுறுசுறுப்பானவர் தற்பெருமை கொண்டவர்.
அனுஷம்:
நேர்மையானவர் அந்தஸ்து மிக்கவர் அமைதியானவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் அரசால் பாராட்டு பெறுபவர்.
கேட்டை:
துணிச்சலானவர் குறும்பு செய்வதில் வல்லவர் முன்கோபி நட்ப்பால் சாபம் பெற்றவர் சாமர்த்தியசாலி உடல் நல அக்கறை இருத்தல் நன்று.
மூலம்:
சுறுசுறுப்பானவர் கல்வியாளர் உடல்பலம்மிக்கவர் நீதிமான் புகழ்விரும்பி அடக்கமிக்கவர்.
பூராடம்:
சுகபோகி செல்வாக்குமிக்கவர் பிடிவாதக்காரர் வாக்குவாதத்தில்வல்லவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.
உத்திராடம்:
தைரியசாலி கலையில் ஆர்வம் பொறுமைசாலி நினைத்ததை சாதிப்பவர் சாதுர்யமாகப் பேசுபவர்.
திருவோணம்:
பக்திமான் சமூகசேவகர் சொத்துசுகம் கொண்டவர் பிறரை மதிப்பவர் உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்:
கம்பீரமானவர் செல்வாக்கு மிக்கவர் தைரியசாலி முன்கோபி மனைவியை நேசிப்பவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.
சதயம்:
வசீகரமானவர் செல்வந்தர் நட்புக்காக செயல்படுவார் பொறுமைசாலி முன்யோசனை கொண்டவர் திறமையாக செயல்படுபவர் ஒழுக்கமானவர்.
பூரட்டாதி:
மன திடமானவர் பலசாலி சுகபோகி பழக இனியவர் தொழிலில் ஆர்வம் மிக்கவர் குடும்பத்தை நேசிப்பவர்.
உத்திரட்டாதி:
கல்வியாளர் சாதுர்யமாகப் பேசுபவர் ஆபரணபிரியர் பக்திமான் கடமையில் ஆர்வம் மிக்கவர்.
ரேவதி:
தைரியசாலி நேர்மையானவர் எதிரியை வெல்பவர் சுகபோகத்தில் நாட்டம் தற்புகழ்ச்சி விரும்புபவர் பழக இனியவர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 26 ஜூலை, 2016

நீங்கள்தலைவலியால் அவதிப்படுபவரா இலகுவான வைத்தியம்?

1.விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.
2.தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.
3.நல்லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
4.நல்லெண்ணெயில்
சிறிது ஜீரகத்தைப் போட்டுக் காய்ச்சி எடுக்கவும். பின்னர்
அந்த எண்ணெயை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலை
குளித்தால்,பித்தத்தால் உண்டாகும் தலை சுற்றல், தலைவலி
குணமாகும்.
5.ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு
சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப்
போட்டால் தலைவலி குணமாகும்.
6.கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, குணமாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>