ஏனைய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உங்கள் வரவேற்பறையில் இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து வைத்தால் நிம்மதி

நிறைய பணம் இருக்கிறது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. நிறைய நகை துணிமணிகள் உள்ளது. ஆனால் மனதில் சந்தோஷம் இல்லை. பஞ்சு மெத்தை உள்ளது. ஆனால் கண்களில் நிம்மதியான உறக்கம் இல்லை. அறுசுவையோடு விதவிதமான பதார்த்தங்களுடன் சாப்பாடு தயாராக உள்ளது. ஆனால் நிம்மதியாக சாப்பிட, நல்ல பசி இல்லை. உடலில் ஆரோக்கியம் இல்லை. ஏன் இந்த பிரச்சனைகள் எல்லாம் நமக்கு வருகிறது. நம்முடைய வாழ்க்கையில் நேர்மையும் உண்மையும் இல்லாத காரணத்தினால், கர்மவினைகள் காரணத்தினாலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு வரத்தான் செய்யும்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்களிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கு கொஞ்சம் தானம் கொடுங்கள். உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். உங்களிடம் இருக்கும் அறுசுவை உணவில், ஒரு சுவை உணவையாவது ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பவனுக்கு தானமாகக் கொடுங்கள். உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும். தங்கம் வைரம் வைடூரியம் என்ற பெட்டி நிறைய பணம் இருந்தால் அதில் ஒரு பங்கையாவது தான தர்ம காரியத்திற்கு செலவு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவை 
ஏற்றுக் கொள்ளலாம்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைத்தவிர மனநிம்மதிக்கு வீட்டின் சந்தோஷத்திற்கு நம்மை சுற்றி நடக்கும் கெட்ட பலன்களை அழிப்பதற்கு என்ன செய்யலாம். ரொம்ப ரொம்ப சுலபமான வழி உள்ளது. ஒரு சிறிய டம்ளர் அல்லது பவுல் எது வேண்டுமென்றாலும் 
எடுத்துக்கொள்ளுங்கள். 
அதில் நல்ல தண்ணீரை நிரப்பி விட வேண்டும். அதன் உள்ளே 2 துளசி இலை, 2 வில்வ இலை, 2 வேப்ப இலைகளைப் போட்டு இதை அப்படியே உங்கள் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இதே போல இன்னொரு எச்சில் படாத கிண்ணத்தில் தயார் செய்து பூஜை அறையிலும்
 வைக்கலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரையும் உள்ளே இருக்கும் பொருட்களையும் மாற்றினால் கூட போதும். உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். நிம்மதி சந்தோஷம் தூக்கம் பசி இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்குமா என்று கேட்டால். நிச்சயமாக இல்லை, சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் மக்களுக்கு கூட இப்படிப்பட்ட பிரச்சினைகள், மன நிம்மதியற்ற சூழ்நிலையை
 கொடுக்கின்றது.
இவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. மன குழப்பத்தில் இருந்து விடுபட, வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். இதில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் கொடுத்து
 கொண்டே இருக்கும்.
இந்த 3 இலைகளை வைத்து விட்டால் எல்லாம் முடிந்ததா? எல்லாம் சரியாகிவிடுமா? என்ற எண்ணத்தோடு மட்டும் பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு மூன்று இலைகளிலும், அந்த கடவுளுக்கு சமம் என்று நம்பியவர்களுக்கு, முழுமையான நிம்மதி கிடைப்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒருபோதும் 
பலன் இருக்காது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 7 மே, 2021

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

முதலாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் 
ஒரு எண்
உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்
 A,I,J,Q,Yஆகியவை.
குண அமைப்பு 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் 
நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் 
அளிப்பார்கள்.
வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை 
மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும்
 இருப்பர்.
 முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.
தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் 
கூடியவர்கள்.
இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, 
அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம்
 கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
உடல் அமைப்பு ஆரோக்கியம் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான
 பலவீனம் இருக்கும்.
கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் 
சாப்பிடுவது நல்லது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மனதை கலங்க வைத்த பிறந்த குழந்தையின் முதல் அழுகை!..

குழந்தை அழுது தாய் சிரிக்கும் நெகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அது குழந்தையின் பிறப்பு தான்.... பொதுவாக பிறந்த குழந்தையானது அழ வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள்.
இவ்வாறு பெற்ற குழந்தையின் அழுகையை கண்டு உச்சி குளிரும் தாயின் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வாறு மகிழ்ச்சியை உருவாக்கும் குழந்தை பிறக்கும் போது பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா?...
இங்கு பிறந்த குழந்தை மூச்சு விடவில்லை, இதயம் இயங்க வில்லை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தை அழும் 
காட்சியே இதுவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இப்படித்தான் இருப்பார்களாம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் !

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:-
அசுவினி:
செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி:
நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர்.
கார்த்திகை:
பக்திமான் மென்மையானவர் செல்வந்தர் கல்வி சுமார் வாழ்க்கைத்தகுதிஅதிகம் பழகுவதில் பண்பாளர்.
ரோகிணி:
கம்பீரவான் உல்லாசப்பிரியர் கலாரசிகர் ஊர் சுற்றுபவர் செல்வாக்கு மிக்கவர் வசீகரமானவர்.
மிருகசீரிடம்:
தைரியசாலி முன்கோபி தர்மவான் புத்திசாலி திறமை மிக்கவர் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
திருவாதிரை:
எளிமை சாமர்த்தியசாலி திட்டமிட்டுப்பணி செய்பவர் விவாதத்தில் வல்லவர் சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
புனர்பூசம்:
கல்விமான் சாதுர்யப் பேச்சு ஊர்சுற்றுவதில் ஆர்வம் நன்றிமிக்கவர் ஆடம்பரத்தில் நாட்டம்.
பூசம்:
பிறரை மதிப்பவர் பக்தியில் நாட்டம் வைராக்கியம் மிக்கவர் நண்பர்களை நேசிப்பவர் புகழ்மிக்கவர் மென்மையானவர்.
ஆயில்யம்:
செல்வந்தர் தர்மவான் செலவாளி ஆடம்பரப்பிரியர் சத்தியவான் நேர்மை மிக்கவர்.
மகம்:
ஆராய்ச்சி மனப்பான்மை கல்வியில் ஆர்வம் தர்மவான் பழக இனிமையானவர் நேர்மையாக நடக்க விரும்புபவர்.
பூரம்:
ஒழுக்கமானவர் புத்திசாலி விவசாயம் வியாபாரத்தில் ஆர்வம் உண்மையானவர் செல்வாக்கு பேச்சுத்திறன் மிக்கவர்.
உத்திரம்:
நாணயமானவர் பக்திமான் நட்புடன் பழகுபவர் நன்றி மறவாதவர் சுகபோகி உறவினர்களை நேசிப்பவர்.
அஸ்தம்:
ஆடை ஆபரண பிரியர் கல்வியில் ஆர்வம் கலாரசிகர் நகைச்சுவையாகப் பேசுபவர் தாய்மீது பாசம் கொண்டவர் பழக இனியவர்.
சித்திரை:
ஊர் சுற்றுவதில் ஆர்வம் கல்விமான் தைரியசாலி எதிரிமீதும் இரக்கம் சாதிப்பதில் வல்லவர் பரந்த உள்ளம் கொண்டவர்.
சுவாதி:
புத்திகூர்மையானவர் யோசித்து செயல்படுபவர் சுகபோகி பழக இனியவர் நம்பகமானவர் யோகம் மிக்கவர்.
விசாகம்:
வியாபார ஆர்வம் சாமர்த்தியசாலி கலா ரசிகர் தர்மவான் சுறுசுறுப்பானவர் தற்பெருமை கொண்டவர்.
அனுஷம்:
நேர்மையானவர் அந்தஸ்து மிக்கவர் அமைதியானவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் அரசால் பாராட்டு பெறுபவர்.
கேட்டை:
துணிச்சலானவர் குறும்பு செய்வதில் வல்லவர் முன்கோபி நட்ப்பால் சாபம் பெற்றவர் சாமர்த்தியசாலி உடல் நல அக்கறை இருத்தல் நன்று.
மூலம்:
சுறுசுறுப்பானவர் கல்வியாளர் உடல்பலம்மிக்கவர் நீதிமான் புகழ்விரும்பி அடக்கமிக்கவர்.
பூராடம்:
சுகபோகி செல்வாக்குமிக்கவர் பிடிவாதக்காரர் வாக்குவாதத்தில்வல்லவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.
உத்திராடம்:
தைரியசாலி கலையில் ஆர்வம் பொறுமைசாலி நினைத்ததை சாதிப்பவர் சாதுர்யமாகப் பேசுபவர்.
திருவோணம்:
பக்திமான் சமூகசேவகர் சொத்துசுகம் கொண்டவர் பிறரை மதிப்பவர் உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்:
கம்பீரமானவர் செல்வாக்கு மிக்கவர் தைரியசாலி முன்கோபி மனைவியை நேசிப்பவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.
சதயம்:
வசீகரமானவர் செல்வந்தர் நட்புக்காக செயல்படுவார் பொறுமைசாலி முன்யோசனை கொண்டவர் திறமையாக செயல்படுபவர் ஒழுக்கமானவர்.
பூரட்டாதி:
மன திடமானவர் பலசாலி சுகபோகி பழக இனியவர் தொழிலில் ஆர்வம் மிக்கவர் குடும்பத்தை நேசிப்பவர்.
உத்திரட்டாதி:
கல்வியாளர் சாதுர்யமாகப் பேசுபவர் ஆபரணபிரியர் பக்திமான் கடமையில் ஆர்வம் மிக்கவர்.
ரேவதி:
தைரியசாலி நேர்மையானவர் எதிரியை வெல்பவர் சுகபோகத்தில் நாட்டம் தற்புகழ்ச்சி விரும்புபவர் பழக இனியவர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>